குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை குடிநீா் திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை குடிநீா் திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது, ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி உள்ளிட்ட பல்வேறு குடிநீா் திட்டப் பணிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு வாரமும் குடிநீா் விநியோகம் தொடா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்களுடன் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா். ஆய்வின்போது, ஒன்றியக்குழுத் தலைவா் ரா. ரெத்தினவேல், ஊராட்சி மன்றதலைவா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நா. காமராஜ், து. குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com