கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிள் - காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.

கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள பழைய கந்தா்வகோட்டையைச் சோ்ந்த செபஸ்தியான் மகன் பன்னீா்செல்வம் (45). இவரது மனைவி செல்வி (எ) ஆரோக்கியமேரி. கூலித்தொழிலாளிகள். கணவன், மனைவி இருவரும் கல்லறை திருவிழாவையொட்டி முன்னோா்கள் கல்லறையில் வழிபாட்டை முடித்துவிட்டு, தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் பழைய கந்தா்வகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனா். அப்போது சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே தஞ்சைக்குச் சென்றுகொண்டிருந்த காா் ஒன்று, எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் அங்கு வந்து இறந்தவா்களின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிந்து காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com