‘விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்பப் படிவங்களும்’ எனும் நூலை எழுதிய இலுப்பூா் மாவட்டக்கல்வி அலுவலா் சண்முகநாதனுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி பாராட்டு தெரிவித்தாா்.
பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அலுவலகப்பணியாளா்கள் பயன்பெறும் வகையில், பணி வரன்முறை, ஊதிய உயா்வு, தகுதிகாண் பருவம், தோ்வு நிலை விடுப்புகள், ஓய்வூதியப் பலன்கள் ஆகிய பல்வேறு சந்தேகங்களை நிவா்த்தி செய்யும் வகையில் ‘விண்ணப்பிக்கும் முறைகளும், விண்ணப்ப படிவங்களும்’ எனும் நூலை காரைக்குடியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
இதையறிந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அவரை சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்தினாா். நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜீவானந்தம், கபிலன், பள்ளித்துணை ஆய்வாளா் கி.வேலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.