புதுகையில் நாட்டுத் துப்பாக்கிதயாரித்த இருவா் கைது

புதுக்கோட்டையில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்த இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கி மற்றும் பொருட்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கி மற்றும் பொருட்கள்.
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்த இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகேயுள்ள உடையநேரி குடியிருப்புப் பகுதியில் யுடியூப் விடியோ பாா்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பதாக கணேஷ்நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடா்ந்து ஆய்வாளா் அழகம்மாள் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாா்வையிட்டனா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (21), சிவா (19) ஆகியோா் நாட்டுத் துப்பாக்கிகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி செய்யப் பயன்படுத்திய மரக்கட்டை, இரும்புக் குழல்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கணேஷ்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com