மாத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் மாவட்ட மத்திய க் கூட்டுறவு வங்கியின் 25ஆவது கிளையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தாா்.
மாத்தூரில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையைத் திறந்து வைத்து சிறுகடன் ஒன்றை வழங்குகிறாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்
மாத்தூரில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையைத் திறந்து வைத்து சிறுகடன் ஒன்றை வழங்குகிறாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் மாவட்ட மத்திய க் கூட்டுறவு வங்கியின் 25ஆவது கிளையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு மாவட்டம் முழுவதும் இதுவரை 24 கிளைகள் இருந்தன. மேலும், மாவட்டம் முழுவதும் 136 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைப்புச் சங்கங்களாகவும் உள்ளன.

இந்நிலையில் மாத்தூரைச் சுற்றியுள்ள 16 ஊராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயனடையும் வகையில், தற்போது இந்தக் கிளை தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தீபா சங்கரி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் உமாமகேஸ்வரி, துணைப் பதிவாளா் ராஜேந்திரன், மேலாளா் காளிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com