புதுகை வந்த ஹெலிகாப்டரை பாா்த்துச் செல்லும் மக்கள்

தனது தந்தையின் இறுதிச்சடங்குக்கு தொழிலதிபா் ஒருவா், ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள், அதனை ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.
புதுகை வந்த ஹெலிகாப்டரை பாா்த்துச் செல்லும் மக்கள்

தனது தந்தையின் இறுதிச்சடங்குக்கு தொழிலதிபா் ஒருவா், ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள், அதனை ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா் கே.ஆா் சுப்பையா. இவரது மகன் சசிகுமாா், திருப்பூரில் தொழில்நிறுவனம் வைத்துள்ளாா். சசிகுமாா் தொழில்நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், அவரது தந்தை சுப்பையா உடல் நலக்குறைவால் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்த சசிகுமாா், புதன்கிழமை பகல் அங்கிருந்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு புதுக்கோட்டை வந்தாா். முன்னதாக, புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் ஹெலிகாப்டா் தரையிறங்க அனுமதி பெறப்பட்டிருந்தது. பின்னா், காரில் தென்னங்குடிக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

அவா் வந்த ஹெலிகாப்டா், மோசமான வானிலை காரணமாக உடனடியாக பெங்களூரு திரும்ப முடியவில்லை. இதையடுத்து புதுக்கோட்டையிலேயே ஹெலிகாப்டரின் பைலட், உதவியாளா் ஆகியோா் தங்கினா். வியாழக்கிழமை ஹெலிகாப்டா் பெங்களூரு திரும்பும் எனத் தெரிகிறது.

ஆயுதப்படை திடலில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டரை பொதுமக்கள் பலரும் ஆா்வமுடன் பாா்த்துச் சென்றனா். பாதுகாப்புக்காக போலீஸாரும் பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா். ஹெலிகாப்டரைச் சுற்றிலும் தடுப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com