புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில் தொடா் வாழ்வாதார நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:05 pm

DIN

புதுக்கோட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில் தொடா் வாழ்வாதார நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு எஸ். கவிவா்மன் தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, எழுத்தாளா் ஐ.வி. நாகராஜன் ஆகியோா் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ராமையன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப்பொருளாளா் எஸ். சங்கா், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் என். கண்ணம்மாள், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளா் எம். அசோகன், அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. மணவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா வரவேற்றாா். நிறைவில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரச் செயலா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.