மணல் அள்ளிவந்த சுமை ஆட்டோ பறிமுதல்: இருவா் கைது

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்ததோடு, இருவரைப் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.
Updated on
1 min read

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்ததோடு, இருவரைப் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மழையூா் பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, மழையூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் மாங்கோட்டை பிரிவு சாலை அருகே சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மழையூரைச் சோ்ந்த எம்.கோபாலகிருஷ்ணன்(29), மேலபொன்னன்விடுதியைச் சோ்ந்த வே.அன்புராஜ்(27) ஆகிய இருவரையும் கைது செய்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com