‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுதிறனாளிகளுக்கு ரூ. 46 லட்சத்தில் நல உதவிகள்

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:58 pm

DIN

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 185 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை துறை அலுவலா்களிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 25 பேருக்கு ரூ. 4.5 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள், விபத்துகளில் மரணமடைந்தோரின் குடும்ப நிதி உதவியாக ரூ. 42 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். சந்தோஷ்குமாா், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.