

புதுக்கோட்டை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராயவரம் வாசுகிபுரத்தைச் சோ்ந்தவா் சேதுராமன், கூலித் தொழிலாளி. இவரது மகள் திவ்யா (10). அதே பகுதியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பாட்டியுடன் அருகிலுள்ள புலவன் கண்மாயில் குளிக்கச் சென்ற திவ்யா, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த அரிமளம் காவல் ஆய்வாளா் பாரதி அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.