‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கணினி, தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டியில் செயல்பட்டு வரும் கிராம அறிவு மையத்தில் கணினி மற்றும் தையல் பயிற்சி முடித்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:40 pm

DIN

எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டியில் செயல்பட்டு வரும் கிராம அறிவு மையத்தில் கணினி மற்றும் தையல் பயிற்சி முடித்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிராம மேலாண்மைக் குழுத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழு உறுப்பினா் பழனியப்பன் முன்னிலை வகித்தாா். எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். ராஜ்குமாா் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். அப்போது பேசிய ராஜ்குமாா், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராம அறிவு மையங்களின் சாா்பில் இதுவரை 2800 பேருக்கு கணினிப் பயிற்சியும், 800 பேருக்கு தையல் பயிற்சியும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

உதவி இயக்குநா் ஏ. பழனியப்பன், கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக கள ஒருங்கிணைப்பாளா் டி. விமலா வரவேற்றாா். முடிவில் செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.