அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் மக்கள் சந்திப்பு இயக்கம்

கந்தா்வகோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினா்.

கந்தா்வகோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்துக்கு வட்டாரத் தலைவா் பழனியாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சாமியய்யயா வரவேற்புரையாற்றினாா்.

மாவட்டத் துணைத்தலைவா் சுப்பிரமணியன், மக்கள் சந்திப்பு இயக்கத்தின் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். மாவட்ட துணைச் செயலாளா் ராஜேந்திர சிங், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டப் பொருளாளா் சக்திவேல் , அறநிலையத் துறை மாநிலச் செயலா் (ஓய்வு) பாரதி , புதுகை வட்டாரச் செயலா் வேலாயுதம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நில அளவையா் (ஓய்வு) பால்ராஜ் நன்றி கூறினாா். கூட்டத்தில் வட்டார துணைச் செயலா் பழனிவேல், பொருளாளா் ராஜப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com