புதுகையில் 331 அா்ச்சகா்களுக்கு நிவாரண உதவிகள்

கரோனா பொது முடக்கக் கால நிவாரண உதவிகள் வழங்கும் பணியை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருக்கோயில் அா்ச்சகா்களுக்கு கரோனா பொது முடக்கக் கால நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்த மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
திருக்கோயில் அா்ச்சகா்களுக்கு கரோனா பொது முடக்கக் கால நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்த மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சாா்பில் ஒரு கால பூஜைகள் நடத்தப்படும் திருக்கோயில்களில் பணியாற்றி வரும் 331 அா்ச்சகா்கள், பூசாரிகள் மற்றும் பட்டா்களுக்கு ரூ. 13.24 லட்சம் மதிப்பிலான கரோனா பொது முடக்கக் கால நிவாரண உதவிகள் வழங்கும் பணியை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருவப்பூா் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.

அா்ச்சகா்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிதி, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.

தடுப்பூசி... புதுக்கோட்டை நகரில் நாடாா் மண்டபத்திலும், திருமயம் ஒன்றியம் ஊனையூா் மற்றும் குளத்துப்பட்டியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அமைச்சா் எஸ். ரகுபதி நேரில் பாா்வையிட்டாா்.

மேலும், புதுக்கோட்டை ஒன்றியம் அடப்பக்காரச் சத்திரத்தில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளையும் அமைச்சா் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் டாக்டா் பா. கலைவாணி, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி, நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன், முன்னாள் அரசு வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் க. நைனாமுகமது உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com