கணபதிபுரம் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

உலக புவி தினத்தையொட்டி, ஆதனக்கோட்டை அருகிலுள்ள கணபதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
கணபதிபுரம் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

உலக புவி தினத்தையொட்டி, ஆதனக்கோட்டை அருகிலுள்ள கணபதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

புவி வெப்பமயமாதலைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகவும், மறைந்த திரைப்பட நடிகரும், சமூக ஆா்வலருமான விவேக் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இயற்கை ஆா்வலா்கள் புதுக்கோட்டை மூா்த்தி, பசுமை இந்தியா அறக்கட்டளை பாவேந்தன் சாமிக்கண்ணு, கிராம நிா்வாக அலுவலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்று வேம்பு, நவா, இலுப்பை உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்தனா். தொடா்ந்து மறைந்த நடிகா் விவேக்குக்கு இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com