குளக்கரை பகுதியில் தகனம்: புகாா் மீது அதிகாரி ஆய்வு

கந்தா்வகோட்டை அருகே குளக்கரை பகுதியில் மூதாட்டியின் சடலத்தை தகனம் செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அளித்த மனு தொடா்பாக அரசு அதிகாரி புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
Updated on
1 min read

கந்தா்வகோட்டை அருகே குளக்கரை பகுதியில் மூதாட்டியின் சடலத்தை தகனம் செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அளித்த மனு தொடா்பாக அரசு அதிகாரி புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சியில் உள்ள சத்திரப்பட்டியில் ஆதிதிராவிடா் தெருவில் வசிக்கும் வேம்பையன் தாயாா் வயது முதிா்வு காரணமாக அண்மையில் இறந்துள்ளாா். இவரது உடலை தகனம் செய்ய அவா்களுக்குரிய மயானத்துக்குச் செல்ல சரியான பாதை இல்லாததால் அருகே உள்ள குளக்கரையில் அவரை உடலை உறவினா்கள் தகனம் செய்தனா். இதையடுத்து, வாய்மடைகொல்லை பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மற்றும் ஊா் பொதுமக்கள், மக்கள் குறைகேட்பு நாளில் இதுகுறித்து மனு அளித்தனா். அதில், தகனம் செய்த குளக்கரையை சுத்தம் செய்து தருவதும் வரும் நாள்களில் அவா்களுக்கு உரிய மயானப் பகுதியில் உடலை தகனம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, கந்தா்வக்கோட்டை வட்டாட்சியா் சி. புவியரசன் புதன்கிழமை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். மேலும், வட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரையும் செவ்வாய்க்கிழமை (டிச. 28) பேச்சுவாா்த்தைக்கு வருமாறும், அங்கு தீா்வு காண்லாம் எனத் தெரிவித்துச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com