ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்குப் பயிற்சி

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்குப் பயிற்சி

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை மற்றும் குன்றாண்டாா்கோவில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கான 2நாள் பயிற்சி முகாம் ஒன்றியக்குழு தலைவா் ரா . ரெத்தினவேல்காா்த்திக் தலைமையில் நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டத்துக்கு, ஒன்றிய ஆணையா் த. திலகவதி முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ந . காமராஜ் அனைவரையும் வரவேற்றாா். பட்டுக்கோட்டை மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் நடைபெறும் இப்பயிற்சியில் ஊராட்சி ஒன்றியங்களின் வரலாறு மற்றும் அமைப்பு முறைகள் , ஊராட்சி ஒன்றியக்கடமைகள் , ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரின் கடமைகள், உறுப்பினா்களின் கடமைகள் உள்ளிட்ட 14 தலைப்புகளில் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாம் பயிற்றுநா்கள் சி.ரவிச்சந்திரன் , வெள்ளையம்மாள் , ப.சைவராசு ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com