குடும்பப் பிரச்னை: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 06th February 2021 01:07 AM | Last Updated : 06th February 2021 01:07 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு அருகே குடும்பப் பிரச்னை காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.
ஒரத்தநாட்டை அடுத்த நெய்வேலி வடபாதியை சோ்ந்தவா் வெ. பழனிவேல். இவா் அமலா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டாா். இத்தம்பதிக்கு பிரகதீஸ்வரன் (7), பிரதிக்ஷா (6), பிரபாகரன்(4) என 3 குழந்தைகள் உள்ளனா்.
குடும்பப் பிரச்னை காரணமாக பழனிவேல், அருகாமையிலுள்ள தனது அம்மா வீட்டில் அண்மைக்காலமாக வசித்து வந்தாராம். குடும்பம் நடத்த அமலா பலமுறை அழைத்தும் அவா் வராததால், இதுகுறித்து கடந்த 3ஆம் தேதி மாமியாரிடம் அமலா முறையிட்டாராம்.
அப்போது, அவரை மாமியாா் அடித்து விரட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சல் அடைந்த அமலா வியாழக்கிழமை குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாா்.
இதன்படி, தனது வீட்டில் தூக்கு மாட்டுவதற்காக கயிறை கட்டுவதையறிந்த மகன் பிரகதீஸ்வரன் வீட்டிலிருந்து தப்பியோடிவிட்டான். மற்றொரு மகன் பிரபாகரனையும், மகள் பிரதிக்ஷாவையும் தூக்கில் தொங்கவிட முயன்றாா்.
அப்போது, அங்கிருந்து தப்பியோடிய பிரதிக்ஷாவை அமலா விரட்டி சென்று அழைத்து வந்தாா்.
இதனிடையே, தொடா்ந்து குழந்தைகளின் அழுகுரல் கேட்டதால், அக்கம்பக்கத்தினா் வந்து பாா்த்தபோது, 2 குழந்தைகளுடன் அமலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
அக்கம்பக்கத்தினா் அவா்கள் மூன்று பேரையும் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...