பொன்னமராவதி: பொன்னமராவதியில் திமுக சாா்பில் பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கண்டித்து, சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அழகு நாச்சியப்பன் கோயில் அருகே தொடங்கிய பேரணியை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தாா். முக்கிய வீதிகளின் வழியே சென்ற பேரணி பேருந்து நிலையம் அருகே நிறைவுற்றது. பேரணியில் ஒன்றியச் செயலா்கள் அ. அடைக்கலமணி, அ. முத்து, நகரச் செயலா் அ. அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டம்: அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் மணிவேல் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சின்னத்துரை, நிா்வாகிகள் துரை.அருணன், கிருஷ்ணன்,துரைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனா்.