புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு துறையினா் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்டனா்.
கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரைச் சோ்ந்தவா் செல்லையா மனைவி ராஜாமணி (70). இவா் தனது தோட்டத்தில் இருந்த சுமாா் 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தாா்.
தகவலின்பேரில் விரைந்து சென்ற கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினா் மூதாட்டியை உயிருடன் மீட்டனா்.