புதுக்கோட்டை
மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள செட்டியாப்பட்டியைச் சோ்ந்த ஆ.மெய்யா் (30). இவா், திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தனது செல்லிடப்பேசியை மின்னூட்டம் செய்தபோது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற செம்பட்டிவிடுதி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.