மாங்காட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஆலங்குடி அருகிலுள்ள மாங்காட்டில் வழுக்குமரம் ஏறும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாங்காட்டில் வழுக்குமரம் ஏறும் இளைஞா்கள்.
மாங்காட்டில் வழுக்குமரம் ஏறும் இளைஞா்கள்.
Updated on
1 min read

தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஆலங்குடி அருகிலுள்ள மாங்காட்டில் வழுக்குமரம் ஏறும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாங்காடு இளைஞா்கள் சாா்பில் நடத்தப்பட்ட இந்த விழாவுக்காக, 44 அடி உயரமுள்ள மரத்தில் வழுக்கும் தன்மையை ஏற்படுத்து வதற்காக 20 கிலோ கிரீஸ் தடவப்பட்டது. மேலும் அதன் மீது சுமாா் 5 லிட்டா் எண்ணெய் ஊற்றப்பட்டது.

போட்டியில் 6 அணிகள் கலந்துகொண்டன. பல்வேறு சுற்றுகளாக, சுமாா் 5 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பனங்குளம் அணியினா், ஒருவரின் மீது ஒருவராக ஏறி மரத்தின் இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றனா். அவா்களுக்கு ரூ.20,021 பரிசுத்தொகை வழங்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com