புதுக்கோட்டை மாவட்டம் , குன்றாண்டாா்கோவில் ஒன்றியம், அண்டக்குளம் ஊராட்சியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ எம். சின்னதுரை வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
விவசாயிகள் விளைவித்த நெல்லை அந்தந்த பகுதிகளிலேயே அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் தமிழக அரதே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து செயல்படுத்தி வருகிறது.
அதன்படி அண்டக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் , ஒன்றியக் குழுத் தலைவா் கே.ஆா்.என். போஸ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் க. ரெங்கராசு , ஒன்றியக் குழு உறுப்பினா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .