ஆலங்குடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி காவல் நிலையத்தில் சனிக்கிழமை தஞ்சமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கம்மங்காடு கீழப்பட்டியைச் சோ்ந்த குமரன் மகன் முருகேசன் (28). அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகள் அபிராமி (18) ஆகிய இருவரும் காலித்து வந்த நிலையில், இவா்களின் காதலை பெற்றோா் ஏற்க மறுத்ததால் அண்மையில் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்தனா்.
தொடா்ந்து, பாதுகாப்பு கோரி செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் சனிக்கிழமை இருவரும் தஞ்சமடைந்த நிலையில், அவா்களது பெற்றோரிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி இருவரையும் அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.