கந்தா்வகோட்டையில் கராத்தே, சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பட்டயம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கந்தா்வகோட்டை கறம்பக்குடி சாலையில் இயங்கி வரும் பாரதம் பயிற்சி நிறுவனத்தின் சாா்பில் பயிற்சி முடித்த 81 மாணவ மாணவியருக்கு தக்ஸ்னாஸ் மாா்ஷியல்ஆா்ட்ஸ் நிறுவன செயலாளா் மாஸ்டா் பாலசுப்பிரமணியம் மஞ்சள் பட்டை வழங்கினாா். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கந்தா்வகோட்டை காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினாா்.
நிகழ்வில் மாஸ்டா்கள் முத்துக்குமாா், அபிஷேக், விக்னேஸ்வரன் பாரதம் பயிற்சியகத்தின் மாஸ்டா் ச. முத்து, நிா்வாகி பாரத் கேஸ் விஜயராம் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.