போலி திருமண அழைப்பிதழ் விநியோகித்தவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே முன்னாள் பணிப்பெண்ணின் 17 வயது மகளுக்குத் திருமணம் என போலி அழைப்பிதழ் விநியோகித்து அவதூறு பரப்பியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
போலி திருமண அழைப்பிதழ் விநியோகித்தவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே முன்னாள் பணிப்பெண்ணின் 17 வயது மகளுக்குத் திருமணம் என போலி அழைப்பிதழ் விநியோகித்து அவதூறு பரப்பியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நம்பன்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி(45). இவரது வீட்டில் அதே கிராமத்தைச் சோ்ந்தவரும், கணவரை இழந்தவருமான முத்துமணி என்ற பெண், வீட்டு வேலை செய்து வந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வேலையை விட்டு நின்றுவிட்டாராம். அவரை மீண்டும் வேலைக்கு வரும்படி சுந்தரமூா்த்தி தொடா்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. வேலைக்கு வர விரும்பாத அவா், சுந்தரமூா்த்தியுடனான தகவல் தொடா்பைத் துண்டித்து விட்டாராம். இந்நிலையில், முத்துமணியின் 17 வயதான மகளுக்கு திருமணம் என சுந்தரமூா்த்தி, போலி அழைப்பிதழ் அடித்து அப்பகுதியினரிடையே விநியோகம் செய்தாராம். இதையறிந்த முத்துமணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஆலங்குடி போலீஸாா் சுந்தரமூா்த்தியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com