டிப்பா் லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 25th March 2021 10:17 AM | Last Updated : 25th March 2021 10:17 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளின் பின்புறம் டிப்பா் லாரி மோதியதில், இளைஞா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், சேவியா்குடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் மு. மணிமாறன் (26). இவா் கிராமத்திலுள்ள கடைவீதியில் மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது தஞ்சாவூரிலிருந்து ரெகுநாதபுரத்துக்கு ஜல்லி பாரம் ஏற்றிச் சென்ற டிப்பா் லாரி மோட்டாா் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது.
இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த மணிமாறன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை காவல் நிலையத்தினா் சடலத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.