மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.
Updated on
1 min read

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தொற்றாளா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், உணவு முறைகள் குறித்தும் கேட்டறிந்த அவா், தொற்றாளா்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டாா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்லூரி முதல்வா் மூ. பூவதி ஆகியோரும் உடனிருந்தனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அவா், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பற்றாக்குறை தொடா்பாக முதல்வா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாா், மிக விரைவில் இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

எழுவா் விடுதலை குறித்து கேட்டபோது, தற்போது இதுகுறித்த கோப்பினை தமிழக ஆளுநா், நாட்டின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறாா் என்றும், தமிழக அரசு தமிழ்நாட்டு மக்களின் கருத்தை புரிந்து கொண்டு நல்ல முடிவை நிச்சயம் எடுக்கும் என்றாா் அமைச்சா் ரகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com