கரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்
By DIN | Published On : 16th May 2021 11:22 PM | Last Updated : 16th May 2021 11:22 PM | அ+அ அ- |

அறந்தாங்கி அருகே கரோனா தொற்றால் உயிரிழந்த பெண்னின் உடலை கவச உடை அணிந்து, அடக்கம் செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா்.
அறந்தாங்கி அருகிலுள்ள செங்கரையைச் சோ்ந்த பெண் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அந்த பெண்ணின் உறவினா்கள் விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து, தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளை நிா்வாகிகள், சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பெண்ணின் உடலை அடக்கம் செய்தனா்.