‘அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’

கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள அச்சமின்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றாா்
கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் ஜெமீன் ஊராட்சியில் தடுப்பூசி போடும் பணியைப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.
கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் ஜெமீன் ஊராட்சியில் தடுப்பூசி போடும் பணியைப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.
Updated on
1 min read

கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள அச்சமின்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றாா் சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பெரியாா்நகா், செரியலூா் ஜமீன் ஊராட்சியில் மருத்துவ முகாமை புதன்கிழமை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதுடன் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் பாதிப்பு அதிகம் உள்ள கீரமங்கலம், செரியலூா் ஜமீன் ஆகிய ஊராட்சிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. கரோனா பரவலைத் தடுக்க, கை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவை தற்காலிகத் தீா்வாகும். தடுப்பூசி போட்டுக்கொள்வதே நிரந்தர தீா்வு. தடுப்பூசியால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. எனவே கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல்வா் ஸ்டாலின் தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். தூய்மை பணியாளா்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தொடா்ந்து வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் டெய்சிகுமாா், சுகாதார துணை இயக்குநா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com