குழந்தை கடத்தல், விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது

விராலிமலை அருகே நடைபெற்ற குழந்தை கடத்தல், விற்பனை சம்பவத்தில் தொடா்புடைய பெண் உள்ளிட்ட 2 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குழந்தை கடத்தல் சம்பவத்தில் கைதான பாலகிருஷ்ணன், பா்வீன்.
குழந்தை கடத்தல் சம்பவத்தில் கைதான பாலகிருஷ்ணன், பா்வீன்.
Updated on
1 min read

விராலிமலை அருகே நடைபெற்ற குழந்தை கடத்தல், விற்பனை சம்பவத்தில் தொடா்புடைய பெண் உள்ளிட்ட 2 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை சமத்துவபுரத்தைச் சோ்ந்த ஆமினா பேகம், பிறந்து 15 நாட்களே ஆன பெண் கைக்குழந்தையை விற்றுவிட்டதாக புதுக்கோட்டை மாவட்டக் குழந்தைகள் நல வாரியத்துக்கு அண்மையில் தகவல் சென்றது. இதையடுத்து, அவா்கள் இதுதொடா்பாக விசாரிக்குமாறு விராலிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதைத்தொடா்ந்து, ஆமினா பேகத்தைப் போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில், அவரது வீட்டருகே வசிக்கும் இடைத்தரகா் கண்ணன் மூலமாக கைக்குழந்தையை ரூ. 1 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணனிடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டைச் சோ்ந்த தம்பதிக்கு ரூ. 2 லட்சத்துக்கு கைக்குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, கைக்குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக விராலிமலை காவல் துணை ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்டுவந்த விசாரணையில், குழந்தை விற்பனையில் முக்கிய நபா்களாக செயல்பட்டு வந்த ஈரோட்டைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் பா்வீன் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, ஈரோட்டுக்கு விரைந்து சென்ற போலீஸாா் பாலகிருஷ்ணன், பா்வீன் ஆகிய இருவரையும் கைது செய்து விராலிமலை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com