விராலிமலை ஒன்றியம், மாத்தூா் அரசு சிறப்பு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளியில் பின்பற்றப்படுகிா, மாணவா்கள் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டுள்ளனரா, மாணவா்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டாா். பின்னா் ஆசிரியா், மாணவா்கள் வருகைப் பதிவேட்டைப் பாா்வையிட்டாா். ஆய்வின்போது பள்ளிதலைமையாசிரியா் வசந்த மல்லிகா உடன் இருந்தாா்.