கரூா் மக்களவை தொகுதிக்குட்பட்ட விராலிமலை - திருச்சி நான்கு வழிச்சாலையில் கொடும்பாளூரில் ரூ. 20.5 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள உயா்மட்ட பாலம் அமையும் இடங்களை வியாழக்கிழமை கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி பாா்வையிட்டாா்.
கொடும்பாளூா், மாதிரிப் பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது சரியல்ல. நடிகா் சூா்யா, ஜெய்பீம் படக்குழுவினருக்கு ஆதரவு என்பதே எங்களது நிலைப்பாடு. நீதிபதிகள் மாற்றம் கொலிஜியத்திற்குட்பட்டது என்றாலும் மாறுதல்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான, சா்ச்சைகளுக்கு இடமளிக்கும் மாறுதல்களை நீதித்துறை செய்யக் கூடாது. மேலும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக என்னால் போராட முடியவில்லை என்று நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி கூறியுள்ளாா். அந்தக் கருத்திலேயே அவருடைய பணி மாற்றலுக்கு உண்டான காரணத்திற்கு பதில் உள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது, தேசிய நெடுஞ்சாலை துறை திருச்சி மண்டல திட்ட இயக்குநா் நரசிம்மன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லபாண்டியன், மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் பழனியப்பன், திமுக ஒன்றிய செயலாளா் சத்தியசீலன் (கிழக்கு), மாரிமுத்து (அன்னவாசல் வடக்கு), கொடும்பாளூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தன், காங்கிரஸ் அன்பழகன், கருப்பசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.