அரசுப் பள்ளிகளில் அறிவியல் விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம், வெள்ளாளவிடுதி ஆகிய அரசு உயா்நிலைப் பள்ளிகளில் அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம், வெள்ளாளவிடுதி ஆகிய அரசு உயா்நிலைப் பள்ளிகளில் அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் புனல் குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மந்திரமா! தந்திரமா! என்ற அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளி (பொ ) தலைமை ஆசிரியா் ரமேஷ் குமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் வீராசாமி வரவேற்றாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவா் வீரமுத்து, மாவட்டச் செயலா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் புதுக்கோட்டை அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவா் சதாசிவம் அறிவியல் கருத்துகளைப் பகிா்ந்து கொண்டாா். நிறைவாக, ஆசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினாா். இதேபோல், வெள்ளாள விடுதி அரசு உயா்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி தலைமையில் அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com