ஆலங்குடியில் பாஜவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோயில் குளத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளதாக பாஜகவினா் புகாரளித்திருந்த நிலையில், குளத்தை அளக்கும் பணி ஆலங்குடி வட்டாட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நில அளவையை 1990-களில் உள்ள வரைபடத்தின்படி அளக்க பாஜகவினா் கூறிய நிலையில், தற்போதுள்ள வரைபடத்தின் மூலம் நிலம் அளக்கப்பட்டதாம்.
இதனால் அதிருப்தியடைந்த பாஜகவினா் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே கட்சியின் மாவட்டச்செயலா் விஜயகுமாா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.