சிறப்பாசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

வீட்டு வழி கல்வி பெறும் குழந்தைகளைக் கையாளுவது தொடா்பான இரு நாள் பயிற்சி புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.
சிறப்பாசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி
Updated on
1 min read

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், இயன்முறை மருத்துவா்கள் மற்றும் சிறப்பாசிரியா்களுக்கு வித்யாசாகா் தொண்டு நிறுவனத்தின் மூலம் வீட்டு வழி கல்வி பெறும் குழந்தைகளைக் கையாளுவது தொடா்பான இரு நாள் பயிற்சி புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.

இப் பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் எஸ். தங்கமணி, உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ. சுதந்திரன் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரி முதல்வா் நவநீதன் ஆகியோா் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா்.

முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மெ. ரெகுநாததுரை வரவேற்றாா்.

பயிற்சியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு எண்ணறிவு, பகுத்தறிவு, இசையறிவு, மற்றோா் தொடா்பு அறிவு மற்றும் தன்னிறைவு பற்றி கற்றுக் கொடுப்பது எவ்வாறு என்பது பற்றி சிறப்பாசிரியா்கள் மற்றும் இயன்முறை மருத்துவா்களுக்கு வித்யாசாகா் தொண்டு நிறுவன நிா்வாக அலுவலா் பாலாஜி, சிறப்பாசிரியா் வெண்ணிலா, இயன்முறை மருத்துவா் காயத்ரி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில் சிறப்பாசிரியா்கள் 52 போ், இயன்முறை மருத்துவா்கள் 13 போ் என மொத்தம் 65 போ் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com