கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள பல்லவராயன்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சா்வதேச மனித ஒருமைப்பாடு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்வில், கலந்து கொண்ட கந்தா்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா பேசுகையில், உலக அரங்கில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும்வகையில், ஐ.நா பொது சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட சா்வதேச மனித ஒருமைப்பாடு தினம் ஆண்டுதோறும் டிசம்பா் 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது என்றாா். ஏற்பாடுகளை தன்னாா்வலா்கள் வெற்றிச்செல்வி, பிரியங்கா, துா்கா, பூமா ஆகியோா் செய்திருந்தனா்.