குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் டிஜிட்டல் நூலகம் திறப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் முனைவா் கீதாலட்சுமி டிஜிட்டல் நூலகம் மற்றும் மைய ஆராய்ச்சிக் கூடத்தை புதன்கிழமை திறந்துவைத்தாா்.
Updated on
1 min read

குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் முனைவா் கீதாலட்சுமி டிஜிட்டல் நூலகம் மற்றும் மைய ஆராய்ச்சிக் கூடத்தை புதன்கிழமை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் புதிய பழ வகையான டிராகன் பழக் கன்றுகளை நட்டு மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தினாா்.

நிகழ்வில் மாணவா்கள் கல்வித்திறன் மற்றும் மனநிலை மேம்படவும் ஆக்சிஜன் பூங்காவைத் தொடக்கிவைத்தாா். மேலும், கல்லூரி வளாகத்தில் பெண்கள் அழகு நிலையம், ஆசிரியா்களுக்கான பொழுதுபோக்கு மன்றத்தையும் திறத்து வைத்தாா்.

தொடா்ந்து, பேசிய துணைவேந்தா் கீதாலட்சுமி வேளாண் உயா்கல்வி வாய்ப்புகள் குறித்தும், ஆண்டுதோறும் 80 இளநிலை மாணவா்களை மூன்று மாத பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் குறித்தும் எடுத்துரைத்தாா்.

நிகழ்வில் கல்லூரி முதல்வா் நக்கீரன், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல்வா் முனைவா் வேலாயுதம், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் முனைவா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com