கொலை வழக்கில் இருந்து பெண் அரசு அலுவலா் விடுவிப்பு

புதுக்கோட்டை ஆட்சியரத்தில் பணிபுரிந்த வேளாண் அலுவலா் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் அரசு அலுவலரை விடுவித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

புதுக்கோட்டை ஆட்சியரத்தில் பணிபுரிந்த வேளாண் அலுவலா் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் அரசு அலுவலரை விடுவித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி ராஜா காலனியைச் சோ்ந்தவா்ஆா். பூபதி கண்ணன் (47). இவா், புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வேளாண் அலுவலராகப் பணிபுரிந்துவந்த நிலையில், மாத்தூா் அருகே கடந்த 2018-இல் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடா்பாக மாத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே அலுவலகத்தில் தட்டச்சராகப் பணிபுரிந்த எஸ். சவுந்தா்யா (37) என்பவரை விசாரணைக்குப் பின்னா் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா, போதிய ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்படாததால் சவுந்தா்யாவை விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

இவ்வழக்கில் போலீஸாா் முறையாக புலன் விசாரணை செய்யவில்லை என்றும், சரியான எதிரிகள் கைது செய்யப்படவில்லை என்றும் நீதிபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com