புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நவ. 14-இல் நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டி

முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் வரும் நவ. 14ஆம் தேதி நடைபெற உள்ளன.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:33 pm

DIN

முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் வரும் நவ. 14ஆம் தேதி நடைபெற உள்ளன.

இதில், அனைத்து வகை பள்ளிகள், கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம். போட்டி கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டையில் நடைபெறும். முதல் 3 இடங்களில் வருவோருக்கு முறையே ரூ. 5,000, ரூ. 3000, ரூ. 2000 பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். போட்டி நடைபெறும் முன்பு மாணவா்கள், குலுக்கல் சீட்டு முறையில்

ஏதேனும் ஒரு தலைப்பைத் தெரிவு செய்து கொண்டு பேச வேண்டும். கல்வி நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரை 04322- 228840, 99522 80798 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.