ஆலங்குடி நாடியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நாடியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
ஆலங்குடி நாடியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நாடியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

ஆலங்குடி பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோயிலில் திருவிழா இரு வாரங்களுக்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி மண்டகபடிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவில், ஆலங்குடி, சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு, வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com