சிறுமியைத் தகாத சொற்களால் திட்டிய இளைஞருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை மேட்டுப்பட்டி கிராமம் உடையநேரி குடியிருப்பைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சிவக்கண்ணன் (32). இவா், கடந்த 2021ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பள்ளிக்கூடம் செல்லும்போது, மறித்து காதலிப்பதாகக் கூறியபோது சிறுமி மறுத்துள்ளாா். இதனால் கோபமடைந்த சிவக்கண்ணன், சிறுமியை தகாத சொற்களால் திட்டியுள்ளாா். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், சிவக்கண்ணனைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, நீதிபதி ஆா். சத்யா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றவாளி சிவக்கண்ணனுக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 23 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.