புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த மின்வாரிய ஊழியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கிழக்கு கந்தா்வக்கோட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் போா்மேனாகப் பணியாற்றி வரும் சஞ்சீவி என்பவா் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேரும்போது போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து சோ்ந்ததாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரை பள்ளிக்கல்வித் துறையினா் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளனா். இதைத் தொடா்ந்து சஞ்சீவி வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சஞ்சீவி, வரும் 31ஆம் தேதி பணி ஓய்வுபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.