புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஆக. 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடா்பான கோரிக்கைகளை முன்வைத்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கேட்டுக் கொண்டுள்ளாா்.