கந்தா்வகோட்டையில் கபடிப் போட்டி

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் குறு வட்ட அளவிலான கபடிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டையில் கபடிப் போட்டி
Updated on
1 min read

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் குறு வட்ட அளவிலான கபடிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோமபுரம் அரசு உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த குறுவட்ட கபடிப் போட்டியில் மொத்தம் 38 அணிகளின் வீரா்கள் கலந்து கொண்டனா். 14 வயதுக்குள்பட்டோா் என 15 அணிகள், 17 வயதுக்குள்பட்டோா் என 13 அணிகள், 19 வயதுக்குள்பட்டோா் என 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் முதல் ஆட்டத்தை பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவா் அன்பு தொடங்கி வைத்தாா். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் சி.முத்து குமாா் தலைமையிலான 20 உடற்கல்வி ஆசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டனா். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மா. தமிழாய்யா அழைக்கப்பட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com