பள்ளி நேரங்களில் தஞ்சைக்கு கூடுதல் பேருந்துகள் கோரி மனு

பள்ளிநேரங்களில் தஞ்சாவூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தாா்.
Updated on
1 min read

பள்ளிநேரங்களில் தஞ்சாவூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தாா்.

இதுதொடா்பாக கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா். ரத்தினவேல் காா்த்திக், அரசுப் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த பின்னா் மேலும் தெரிவித்தது:

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சை சாலையில் உள்ள கல்வி நிறுவனங்களான வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி, புதுநகா் ஆரம்ப சுகாதார நிலையம், புனல்குளம் பொறியியல் கல்லூரி, தனியாா் பெண்கள் கலை கல்லூரி, புனல்குளம் ஆரம்ப சுகாதார மையம், தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகள், தனியாா் நிறுவனப் பணியாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள் என சுமாா் 500 போ் தினசரி தஞ்சைக்குச் சென்றுவருகின்றனா். ஆனால் தஞ்சைக்குச்செல்லும் வழித்தடத்தில் முறையாக பேருந்துகள் இயங்காததால் தினசரி தஞ்சை செல்லும் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறாா்கள். பொதுமக்கள் நலன்கருதி, இப்பிரச்னை குறித்து கந்தா்வகோட்டை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கிளை மேலாளரிடம் புதன்கிழமை கூடுதல் பேருந்துகள் இயக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com