கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணி புதன்கிழமை நடைபெற்றது.
பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் அசோக ராஜன் தொடங்கிவைத்தாா். முகாமில், முதல்வரின் நோ்முக உதவியாளா், பொருளாளா், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டனா். மேலும் மழைக்காலம் நெருங்குவதால் மழை நீா் தேங்கும் பொருள்களை அப்புறப்படுத்தி குப்பைகளை அகற்றினா். நிகழ்ச்சியை இளைஞா் செஞ்சிலுவை சங்க பொறுப்பாளா் சையத் ஆலம் ஏற்பாடு செய்திருந்தாா்.