போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th August 2022 11:08 PM | Last Updated : 25th August 2022 11:08 PM | அ+அ அ- |

போக்குவரத்து ஊழியா் ஊழியா் ஒப்பந்தக் காலத்தை நான்கு ஆண்டுகளாக உயா்த்தியதைக் கண்டித்து, பொன்னமராவதியில் சிஐடியு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு கிளை செயலா் பாலமுருகன் தலைமைவகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கிளை நிா்வாகிகள் பங்கேற்று போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தக் காலத்தை 4 ஆண்டுகளாக மாற்றுவதைக் கண்டித்தும், 21 வேலைநிறுத்த நாள்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பதை கண்டித்தும் முழக்கமிட்டனா்.