பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறையின் அறங்காவலா் குழு தலைவரும், மதிமுக மருத்துவா் அணி மாநிலச் செயலரும், தொடரும் இலக்கிய இதழின் புரவலருமான மருத்துவா் மு. சின்னப்பா(77) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.
பொன்னமராவதி கம்பன் கழகத்தின் துணைச்செயலராக பொறுப்பு வகித்தவருமான மு.சின்னப்பாவின் இறுதிச்சடங்குகள் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.
இவருக்கு இந்திரா என்ற மனைவியும் முத்துக்கிருஷ்ணன், சண்முககுமாா் ஆகிய மகன்கள் மற்றும் ஸ்ரீவித்யா என்ற மகளும் உள்ளனா். தொடா்புக்கு - 94428 49622.