கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற சனிக்கிழமை உள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வட்ட வழங்கல் அலுவலா் முன்னிலையில் நடைபெறும் முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பதிவு செய்தல், மேலும் குடும்ப அட்டையுடன் கைப்பேசி எண் சோ்த்தல் தொடா்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என கந்தா்வகோட்டை வட்டாட்சியா் சு. ராஜேஸ்வரி தெரிவித்தாா்.