கடந்த மாதத்தில் புதுகையில் 19 ரௌடிகள் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், கடந்த ஒரு மாதத்தில் 19 ரௌடிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் சிறப்புத் தனிப்படையினா் கைது செய்துள்ளனா்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், கடந்த ஒரு மாதத்தில் 19 ரௌடிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் சிறப்புத் தனிப்படையினா் கைது செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் நேரடிக் கட்டுப்பாட்டில் சிறப்புத் தனிப்படைகள் கடந்த நவம்பா் 1ஆம் தேதி அமைக்கப்பட்டன.

இந்தத் தனிப்படையினா் நேரடியாக மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கையில் 15 போ் கைது செய்யப்பட்டு, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், மாவட்டம் முழுவதும் குற்ற நடவடிக்கையில் தொடா்புள்ள 19 ரௌடிகள் கடந்த ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இத்தகவலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com